Skip to main content

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு - 200க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் பங்கேற்பு

 



தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மே-12 ந்தேதி சென்னை, திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் இல்லத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. பத்திரிகை ஆசிரியர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 200 -க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட 350  பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்டனர்.சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆசிரியர் நமது தமிழ்மண், தலைமை அரசு கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.புகழேந்தி இயக்குனர் சிறைவாசிகள் உரிமை இயக்கம், மூத்த பத்திரிகையாளர்கள் வி.எஸ்.இராமன், எஸ்ஆர்.லக்ஷ்மி நாராயணன் ஆசிரியர் ராக்போர்ட் டைம்ஸ், சிவ.ராஜசேகரன் மாமன்ற உறுப்பினர், சி.எம்.துரை ஆனந்த் சிவகங்கை நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.விழாவிற்கு மாண்புமிகு செய்த்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் வழங்கிய  வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது.


அமர்வு- 1

பத்திரிகையாளர்களின் மூத்த முன்னோடி மகாகவி பாரதியார் திருஉருவ சிலைக்கு முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட குறும்படத்தை தலைமை அரசு கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., அவர்கள் வெளியிட்டார்.பத்திரிகையாளர்களின் இன்றைய நிலை, எதிர்கால நலன், ஒற்றுமையின் அவசியம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்கள் வி.எஸ்.இராமன், எஸ்ஆர்.லக்ஷ்மி நாராயணன், தோழர் லெலின், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.பத்திரிகை சுதந்திர தின விழா, பத்திரிகையாளர்களின் இன்றைய நிலை குறித்தும், வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார்.பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டி கலந்துக்கொண்ட அனைவருக்கும் விபத்து காப்பீடு வழங்க விண்ணப்பம் வழங்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டது விரைவில் விபத்து காப்பீடு அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுமார் 300 பத்திரிகையாளர்கள் விண்ணப்பம் கொடுத்தனர்.பத்திரிகை ஆசிரியர்களை பாராட்டும் வகையில் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


அமர்வு-2

பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் (ROUND TABLE CONFERENCE) சிறப்பாக நடைப்பெற்றது. பத்திரிகை வெளியிட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை குறித்து தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும், அச்சு ஊடகத்திற்கு உள்ள அச்சுறுத்தல் குறித்தும், தினசரி, வார இதழ்கள், மாத இதழ்களுக்கு உரிய அங்கீகாரம் பெறுவது, அச்சு காகித விலை உயர்வு, அரசு அடையாள அட்டை தொடர்பாகவும், வளர்ந்துவரும் தினசரி மற்றும் பருவ இதழ்களுக்கு பாராமுகம் கட்டுவது குறித்தும், தமிழகத்தில் அதிகரிக்கும் பத்திரிகை தீண்டாமை (சிறிய பெரிய பாகுபாடு) தமிழக அரசின் அனைத்து சலுகையும் தலைமை செயலக   நிருபர்கள் முதல் தாலுக்கா நிருபர்கள் வரை கிடைத்திட வழிவகை செய்வது தொடர்பாகவும், நலவாரியம் உள்ளிட்ட  பல்வேறு முக்கிய பிரச்சினைகளை பற்றி விரிவாக பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு செய்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.நமது நிலை, நமது கோரிக்கை, நமது தேவை என்ன என்பதனை முழுமையாக தமிழக அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சென்று நமக்கான  நிரந்தர தீர்வை எட்டுவது குறித்தும், அரசு அடையாள அட்டை பெற கடுமையான விதிகளை தளர்த்தி எளிய விதிகள் வேண்டும், பத்திரிகை அச்சடிக்கும் பிரதிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து வெளிவரும் தன்மையின் அடிப்படையில் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும், பத்திரிகை ஆசிரியர்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதும், ஒற்றுமையை தொடர்ந்து பலப்படுத்துவது, பத்திரிகை விற்பனை, விளம்பரம் உள்ளிட்ட வருவாய் தொடர்பான ஆலோசனை, பருவ இதழ்களின் எதிர்கால நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக பயணிப்பது உள்ளிட்ட முக்கிய கருத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டது.பத்திரிகை ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள், கோரிக்கைள் குறிப்பெடுத்துக் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது, செயல்படுவது என தீர்மானம் செய்யப்பட்டது.தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் நடத்திய காலை 9 மணிக்கு தொடங்கிய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை, பரதநாட்டியம், தேனீர் இடைவேளை தமிழ் ராப் பாடல்,  பத்திரிகையாளர்கள் கௌரவிப்பு, மதிய உணவு இடைவேளை, பத்திரிகைகள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம், நன்றியுரையுடன் மாலை 5:45 மணிக்கு இனிதே நிறைவுற்றது.தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் நமது நகரம் எஸ்.சரவணன் தலைமையில், வரவேற்புரை பொதுச்செயலாளர், கோ.சத்யநாராயணன் ஆசிரியர் பீப்பிள் டுடே, முன்னிலை எம்.காமேஷ் கண்ணன்  ஆசிரியர் வெற்றியுகம், 

விழா ஒருங்கிணைப்பு..

ஒருங்கிணைப்பாளர்  பாடி.பா.கார்த்திக் ஆசிரியர் பேனா முள், துணைத்தலைவர் பி.ராஜன் ஆசிரியர் சட்ட கேடயம், இணை செயலாளர் எம்.கிருஷ்ணவேணி ஆசிரியர் நீதியின் தீர்ப்பு, துணை செயலாளர் கி.வினோத் ஆசிரியர் தர்ம ராஜ்ஜியம், அமைப்பு செயலாளர்கள் விஜயகுமார் ஆசிரியர் விழுதுகள், பி.ஜி.முகுந்தன் ஆசிரியர் மாலை தீபம், அ.சரவணன் ஆசிரியர் மண்ணின் குரல், இளஞ்செழியன் ஆசிரியர் ராஜ கர்ஜனை, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம் ஆசிரியர் விழா முரசு, மஞ்சு நாதன் ஆசிரியர் பல்லவன் முரசு, சரண் ஆசிரியர் தேனை பார்வை, ஹரிகிருஷ்ணன் ஆசிரியர் மக்கள் ராஜபார்வை, செந்தமிழ்செல்வி ஆசிரியர் திராவிட உதயம், சக்திவேல் துணை ஆசிரியர் பரததூண்கள், சி.ராமசந்திரன் ஆசிரியர் ஆரம்பம், எம்.எல்.வீரா ஆசிரியர் மின்னொலி, சீனிவாசன் ஆசிரியர் அதிரடி தீர்ப்பு, குறுங்கை கலைமணி ஆசிரியர் சட்ட களஞ்சியம், ப.புகழேந்தி, தினேஷ், பாஸ்கர், சதீஷ்குமார், இளவரசன், ஸ்ரீராம், விஜயகுமார், வினோத், கிரிதரன், ஈஸ்வரன், முரளி, ஜீவா, மோகன், சரவணன், மோகன், ஞான்ராஜ், சக்திவேல், கார்த்திக், கதிர்வேல், பாலசுப்ரமணியன், சாம்சங் செல்வகுமார், கணேச பாண்டி, சண்முகம், விஜய் சுபாஷ் சந்திரன், மோகன், தேவராஜ், ஜேம்ஸ் பெருமாள் உள்பட்ட தமிழநாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடந்தது.





Comments

Popular posts from this blog

ஒற்றுமைக்கு அடிதளமிட்ட பத்திரிகை ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்.

 தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சஙகம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் 31.08.2023 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். துறைச் சார்ந்த ஆலோசனைகள், கருத்து பரிமாற்றம், உரிமைகள், சலுகைகள், கடமைகள், கோரிக்கைகள், ஒற்றுமையின் அவசியம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டது, நமது ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்பெறவும், நமது ஒற்றுமைக்கு அடிதளமிட்டது இந்த கூட்டம். பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை அனைவரின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும். நிகழ்சியின் முன்னதாக சமீபத்தில் மறைந்த பத்திரிகையாளர்கள் திரு.துரை பாரதி, முரசொலி துணை ஆசிரியர் திரு.முரசொலி ராஜா, திராவிடர் குரல் ஆசிரியர் திரு.சோ.பழனியப்பன், நமது நாடு ஆசிரியர் திரு.நவீன் பிரபாகர், தாமரை இதழ் ஆசிரியர் திரு.சேகர், மக்கள் கட்டளை ஆசிரியர் திரு.பாக்யராஜ், விடியும் நேரம் ஆசிரியர் திரு.தாமஸ், மூத்த பத்திரிகையாளர் திரு.இராமஜெயம், ஈ டிவி செய்தியாளர் திரு.லெனின், புதிய தலைமுறை...

மத போதகர் கொடுத்த அதிகமான பாலியல் தொல்லை - பொறுக்கமுடியாமல் கொலை செய்த பெண்

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (வயது: 61) என்பவர் தங்கியிருந்தார். அவர், அங்கிருந்த வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் அங்குள்ள மாத்தூர், மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி என்ற பிரின்சி (46) என்பவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு வீராசாமிக்குத் திருமணம் மீறிய உறவு எற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வீராசாமி, செல்வியிடம், தான் தனியாக தங்கியிருப்பதாகவும் தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட செல்வி, 'எனக்கும் கணவர் இல்லை. வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறேன். மத்த ஆள் எதற்கு... ந...

வீட்டு மனை பட்டா , அடிப்படை வசதி வேண்டி குன்னூர் வருவாய் கோட்டாட்சியரிடம் நஞ்சபுரசத்திரம் கிராம மக்கள் கோரிக்கை...!

ஜூன் 23  நீலகிரி மாவட்டம்  குன்னுர் வட்டத்தில்  நடைபெற்ற 1432 அது வருவாய் தீர்வாயம் ஜமாபந்தியில் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடாமட்டம் பகுதிக்கு சாலை வசதி வேண்டியும் நஞ்சபுரசத்திரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி. நஞ்சபுரசத்திரம் காட்டேரி பூங்கா அரசு விதை பண்ணை மக்களுக்கு சரியான குடிநீர் வணங்குவது சம்பந்தமாகவும் குன்னூர்  வருவாய் கோட்டாட்சியரிடம் இடம் மணு கொடுக்கப்பட்டது   மனு சம்பந்தமாக  பிரச்சனையை கூடிய விரைவில் சரி செய்த தரப்படும் என்று கோட்டாட்சியர்  மற்றும் தாசில்தார்  உறுதி அளித்தனர். செய்தியாளர் பிரபு 

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு..!

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் கொளத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் திறந்து வைத்து அக்கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது,  தொடர்ந்து 19 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு 20 நாளான ராகுல் காந்தி பிறந்தநாளன்று பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர் இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் 64வது ஏ வட்டத் தலைவர் வேலு மற்றும் ஒன்றாவது சறுக்கல் தலைவர் முரளி  ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர் இதில் சிறப்பு  நிகழ்வாக ராகுல் காந்தி பெயரில் குமரன் நகர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம்.

  சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்திற்குட்பட்ட காரம்பாக்த்திலுள்ள கங்கை அம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து இலவச முகாமை நடத்தினர்.   இந்நிகழ்வில்  முதலாவதாக மாநகராட்சி 198 வது மாமன்ற உறுப்பினரும்   பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லியோ என்.சுந்தரம், தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் மாநிலத் தலைவர் ஸ்ரீதர்,  மாநில பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா, மாநில துணை தலைவர் மாலை முரசு அகமதுஅலி, மாநில அமைப்பு செயலாளர் அரசுமலர் பாலமுருகன், மாநில செய்தி தொடர்பாளர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ், அலுவலக செயலாளர் கொளத்தூர் நண்பன் சக்தி மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மதன் கோபால், முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் லயன்ஸ் அன்பழகன், மகி என்கிற பழனி, கார்த்திக், அன்பரசு, மோகன், அவர்களுடன்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தென் சென்னை மாவட்ட தலைவர்  D.செல்வா ஏற்பாட்டில் நட...

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்பல்லோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

  \சென்னை சோழிங்கநல்லூர் காரப்பாக்கம்,  கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்பல்லோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய,  மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, சங்கத் தலைவர் ஸ்ரீதர், பொதுச் செயலாளர் சத்யா, தலைமை தாங்கினர்.. பொருளாளர் அய்யாவு சந்திரன், துணைத் தலைவர் அகமது அலி, இணை செயலாளர்கள் சந்திரசேகரன், கார்த்திகேயன்,  அமைப்புச் செயலாளர் பாலமுருகன்,  சட்ட ஆலோசகர் தினகரன், வடசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்,  சிறப்பு விருந்தினராக சங்க கவுரவ தலைவர் ஜெயராமன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் அரவிந்த் ரமேஷ், அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவ முகாம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்,.  மேலும் வட்ட செயலாளர் உமாபதி, தேவகுமார், சாமிநாதன், பெருமாள், முருகன், சம்பத், வென்ராஜ், கடும்பாடி சதீஸ், ராஜேஷ், ராகவன், மனோஜ், தங்கராஜ், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார்,...

அரியலூரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்பு..!

 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(43). சவுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பானுமதி(35), மகன்கள் பிரசாத்(13), சாத்விக்(2), மகள் சாத்விகா(2). இதில்,சாத்விக், சாத்விகா ஆகியோர் இரட்டையராகப் பிறந்தவர்கள். இந்நிலையில், ராஜாவின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மீன்சுருட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பானுமதியும், பிரசாத், சாத்விக், சாத்விகா ஆகியோர் தரையிலும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப்பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், உயிரிழந்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம், குழந்தைகள் 3 பேரையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் எஸ்.பி. செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்

திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றும் 4 காவலர்கள் உதவி ஆய்வாளர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 615 உதவி ஆய்வாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டது.  இந்த இந்த துறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றி வரும் 16 ஆயிரத்து 11 காவலர்கள் கலந்துகொண்டு போட்டியின்றி எழுத்து தேர்வு உடல் திறன் தேர்வு நேர்முகத் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது கடந்த மாதம் 30 -ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் நான்கு காவலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் அஜித்குமார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சுரேஷ்.5-வது இடத்தை வென்றார். மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆயுதப்படையில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் கனிராஜா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் சப்இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்...

ஈரோடு சீனாபுரத்தில் 24×7 மது விற்பனை..! போலி மதுபானத்தால் குடிமகன்கள் அச்சம்..!! டாஸ்மாக் பார் உரிமையாளர் பிரகாஷுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள்..!

 மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி பதவியேற்றுடன் சில நாட்களுக்கு ஈரோட்டில் மதுக்கடைகள் விற்பனை கட்டுக்குள் இருந்தது . ஆனால் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 24×7 நேரமும் மது விற்பனை தாராளம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக  போலி மதுபானங்கள் அதிகளவு விற்பனைக்கு வருகிறது,  டாஸ்மார்க் கடைகள் வேலை நேரம் ஆன மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடையில் வாங்கும் மதுபான சரக்கை தவிர.  பார்களில் இல்லிகளாக வழங்கப்படும் மதுபான கட்டிங் பெரும்பாலும் போலி மதுபானம் ஆகும்  இதனை அருந்தும் குடிமகன்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.   அமைச்சர் முத்துசாமி மது குடிப்போரே குறைக்கவும், மது விற்பனையை குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார் . ஆனால் தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் அமைச்சரின் உத்தரவை  மதிக்காத அதிகாரிகள் மெத்தனமாக மாமூல் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். மது விற்பனை குறித்து புகார் அளித்தால் அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்படும் என காவல்துறைகள் மிரட்டி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட...

முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் தலைவரும், மக்கள் விருப்பம் ஆசிரியருமான D.M.தருமராஜா

 சாமரிட்டன் முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை  கொண்டாடிய,  ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் -  தமிழ்நாடு, நிர்வாகிகள். ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் -  தமிழ்நாடு,  மாநில தலைவரும்,  மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான D.M.தருமராஜா D, Astro அவர்களின்  பிறந்த நாள் நிகழ்ச்சி 24/08/2023 அன்று சென்னை -  பல்லாவரத்தில் இயங்கும் சாமரிட்டன்  முதியோர் கருணை இல்லத்தில் நடைபெற்றது,அங்குள்ள முதியோர்கள்  மற்றும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கினார் தருமராஜா,நிகழ்ச்சியில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு,  மாநில செயற்குழு உறுப்பினர் S.முரளி D, Pharm, மனிதநேயம் பத்திரிகை ஆசிரியர் ராஜேஷ்,  தென்சென்னை மாவட்ட  ஆலோசகரும்,  உதவிக்கரம் பத்திரிகை உதவிய ஆசிரியர் எம்.பி.நந்தகுமார் BA, தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA,  திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் P.பிரகாசம் BE,  செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, அமைப்பாளர் N.யேசுகும...